Wednesday 14 May 2014

தமிழும் தமிழரும்-4.சித்திரை முழுநிலவு நாள் இந்திர விழா, கோவலன்- மாதவி வாழ்வில் நடந்தது..



தமிழும் தமிழரும்-4
~~~~~~~~~~~~~~~~~~~~~~

     இன்றய நாள் – சித்திரை முழுநிலவு நாள் என்பதை பெரும்பாலானோர் அறிவோம்.

     தமிழர் வலாற்றில் இன்றய நாள் என்ன நாள் என்று அறிவோமா...வாருங்கள் அறிந்துகொள்வோம்.

     தமிழர் வலாற்றில், சோழ இராச்சியத்தில் இன்றய நாளில் நடந்தவை இரண்டு.

     அவற்றில் முதலாவது- இந்திர விழா. இரண்டாவது- கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோர் வாழ்வில் நடந்தவொரு நிகழ்வு.

1.இந்திர
விழா!
~~~~~~~~~~~~~~~~

தோன்றிய காரணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~
     பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்த நகரமாக விளங்கிவந்தது சோழரது கடற்கரை நகரமாகிய புகார் நகரம்.

     அப்படிப்பட்ட புகார்  நகரம் மேலும் வளமுடன் பொலிவடைந்து விளங்க  வேண்டுமானால் இந்திரனுக்கு விழா எடுக்க வேண்டும் என முனிவர் அகத்தியர் தெரிவிக்க, அப்போது புகார் நகரத்தை ஆட்சி செய்த சோழ மன்னன் தொடித்தோட் செம்பியன் அவ்வாறே விழா எடுக்க  இசைவு அளித்ததுடன், ‘இந்திர விழா’ மிகச் சிறப்புடன் நடைபெற ஏற்பாடுகளையும் செய்தான் என்று கூறப்படுகின்றது.

      அம்மன்னனின் காலத்திற்குப் பின்னர் வந்த மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்ட இந்திர விழாவானது, மன்னர்களும் மன்னர் ஆட்சியமும் முடிவு பெற்று குடியாட்சி விளங்கும் இன்றளவும் ‘சித்திரை மாதத்து முழுநிலவன்று (பெளர்ணமியன்று)’  அப்பகுதியில் வெகு விமரிசையான விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


    இதுகுறித்து சிலப்பதிகாரத்தில் 'விழாவறை காதை' பகுதியில் இளங்கோ அடிகள் அருமையாகக் குறிப்பிடுகின்றார். அவர் இந்திர விழா தொடங்கிய முறையையும், சோழ மன்னனின் அருஞ் செயலும் ஆற்றலும் வியந்து போற்றப்படும் செய்தியையும் கூறுவதிலிருந்து  நாம் இந்திரவிழா கொண்டாட்டத்தை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

2.கோவலன்-மாதவி
~~~~~~~~~~~~~~~~~~~~~


     புகார் நகரம் இன்று பூம்புகார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.

     பூம்புகாரில், காவிரி ஆற்றங்கரையோரம் கோவலனும் மாதவியும் இந்திர விழாவினைக் கொண்டாடி மகிழும் வேளையில் நடந்தது அந்த துயர நிகழ்வு.

      மகிழ்வாய் மாதவியோடு கோவலன்
கவிரியாற்றங்கரையில் வீற்றிருக்கும்போது அவன் காவிரி ஆற்றினை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி யாழிசைத்துப் பாடல் ஒன்றைப் பாடலானான்.

     அவ்வாறு கோவலன் பாடியதைக் கேட்ட மாதவி, அவன் காவிரி ஆற்றைக்குறித்துப் பாடுகின்றான் என்பதைப் புரிந்துகொள்ளாது, அவனது உள்ளத்தில் வோறோரு பெண்ணின் நினவு உள்ளதாவும், அவன் தன்னை விரும்பிய காதல் நிலையிலிருந்து வேறுபட்டான் என்றும் எண்ணி ஊடல் காரணமாய் அவனடமிருந்த யாழினை வாங்கித் தானும் வேறொரு குறிப்பினை உடையவள் போலக் கானல் வரி பாடினாள்.


       ஆனால், அவளது பாடலைக் கேட்ட கோவலனோ, மாதவி வேறொரு ஆடவனை மனதில் வைத்துப்பாடினாள் என்றெண்ணி, தனது வாழ்வில் அவளோடு கை கோர்த்து இணைந்திருந்த பிணைப்பை அந்நிலையிலேயே கைவிட்டவன் ஆனான்.


       இரவாகிவிட, ‘‘பொழுது போனது நாம் எழுவோமா ’’ என மாதவி கேட்டதும் அவளோடு கூடிச் செல்லாமல், கோவலன் அவளை விட்டுத் தனியாகப் பிரிந்து சென்றதும் இதே சித்திரை முழுநிலவு நாளன்று (பெளர்ணமியன்று) தான்!

     தமிழர் யாவரும் மறந்து போனது பூம்புகாரின் இந்திர விழாவை மட்டுமல்ல மாதவியைப் பிரிந்த நாளையும்தான். இவற்றை இன்றளவும் ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பது தமிழ் மொழி கண்ட சிலப்பதிகாரம்தான்!


(
ஓவியம் புகழ்மிக்க .செ வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது )

2 comments:

  1. மறக்காமல் சிறப்பை அறிய வைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உற்சாகப்படுத்தும் தங்களின் கருத்திற்கு நன்றி திரு. திண்டுக்கல் தனபால்.

      Delete